சினிமா

’அண்ணாத்த சேதி’.. விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!!

Veeramani

விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்ணாத்த சேதி பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி, மஞ்சிமா மோகன் நடிப்பில் டெல்லிபிரசாத் தீனதயாள் இயக்கியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 5 மணிக்கு டிவிட்டரில் வெளியானது. இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அண்ணாத்த சேதி என்று தொடங்குகிறது அந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது 

விஜய் சேதுபதியின் குரலுடன் தொடங்குகிறது பாடல் அதில் “ எங்கிருந்தோ வந்தவர்கள் நம்மை ஏமாற்றி, நம்மை இடத்தை புடிச்சி நம்ம தலைமேல உக்காரும் வரைக்கும் சும்மாவே இருந்திருக்கோம், உரிமை என்பது பிச்சை அல்ல. நம் உரிமைகளை பறிக்க நினைத்தால் அவன் மூஞ்சியை விட்டுட்டு மூளையை உடைக்கணும்” என்றபடி பாடல் தொடங்குகிறது. சூரிய விதைகளை பயிரிடுவோம், பூமியை புதிதாக்குவோம் என்றபடி தொடர்கிறது பாடல்வரிகள்...