சினிமா

பெப்சி சினிமா தொழிலாளர்களுக்கு வீடுகட்ட நடிகர் விஜய் சேதுபதி ரூ. 1 கோடி நன்கொடை

sharpana

பெப்சி திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் அமைக்க நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

பெப்சி தொழிலாளர்களுக்கு பையனூரில் வீடுகட்ட அரசு இடம் வழங்கியிருந்தது. அந்த இடத்தில் வீடுகட்டும் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. தமிழக அரசு சினிமாத்துறையினருக்கு பையனூரில் 65 ஏக்கர் நிலம் கொடுத்தது. அதில், படப்பிடிப்புத்தளம் கட்டப்பட்டுள்ள நிலையில், வீடுக்கட்டும் பணிகளும் தற்போது துவங்கவுள்ளன.

இதுகுறித்து, ஏற்கனவே இயக்குநர் செல்வமணி கூறும்போது, “பையனூரில் அரசு வழங்கியுள்ள நிலத்தில், 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடியும். முதல்கட்டமாக 1000 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட இருக்கிறோம். அனைத்து நடிகர்கள், தொழிற்சாலைகள் பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் வீடுகள் அமைத்து திரைப்பட நகரமாக்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பணிகளுக்காகத்தான் தற்போது விஜய் சேதுபதி நிதியுதவி அளித்திருக்கிறார்.