சினிமா

’பீஸ்ட்’ வேற மாதிரி இருக்கும்: விஜய் சாருக்காக புதுசா பண்ணிருக்கேன் -நெல்சன் திலீப்குமார்

sharpana

 பீஸ்ட்’ வேற மாதிரி இருக்கும் என்று இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தெரிவித்திருக்கிறார்.

 ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். அனிருத் இசையமைகிறார். சமீபத்தில், இப்படத்தின் 6 ஆம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது. விஜய் ‘பீஸ்ட்’ படத்திற்காக 120 நாட்கள் ஒதுக்கியுள்ளார். அதில், 75 சதவீத படப்பிடிப்பு இதுவரை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 25 சதவீத படப்பிடிப்பை இரண்டுக்கட்டங்களாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. டிசம்பரில் முழு படப்பிடிப்பு நிறைவடைகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நெல்சன் திலீப்குமார் “ பீஸ்ட் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ‘வேற மாரி’ இருக்கும். புது ஜானரில் பண்ணிருக்கேன். விஜய் சார் வைத்து பண்ணும்போது விஜய் சாருக்கும் புதிதாக இருக்கவேண்டும். எனக்கும் புது முயற்சியாக இருக்கவேண்டும்.இதையெல்லாம் மனதில் வைத்துதான் படத்தை இயக்கியிருக்கிறேன். கண்டிப்பாக புதிதாக இருக்கும்” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்.