சினிமா

நடிகர் சுஷாந்த் கைப்பட எழுதிய டைரி பக்கத்தை பகிர்ந்த காதலி ரியா

EllusamyKarthik

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் சூழலில் அவரது காதலி ரியா சக்கரவர்த்தி சுஷாந்தின் டைரியிலிருந்து ஒரு பக்கத்தை பகிர்ந்துள்ளார்.

சுஷாந்தின் மரணத்திற்கு நடிகை ரியாவும் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ள சூழலில் இந்த டைரி பக்கத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

சுஷாந்த் கைப்பட எழுதியுள்ள அந்த பக்கத்தில் தன்னை நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்த தன் மனம் கவர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதில் நடிகை ரியா மற்றும் தன் அப்பா, அம்மா மற்றும் செல்ல பிராணியான நாய்க்கும் நன்றி சொல்லியள்ளார் சுஷாந்த். 

‘இந்த வாட்டர் சிப்பர் மட்டும் தான் எனக்கு சுஷாந்த் விட்டுச் சென்றுள்ள ஒரே சொத்து’ என ரியா தெரிவித்தள்ளார்.