சினிமா

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 30 இலட்சம் நன்கொடை வழங்கிய சூர்யா

Veeramani

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கு 30 இலட்சம் ரூபாயை நடிகர் சூர்யா 30 இலட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கலைப்புலி தாணு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளைக்கு நடிகர் சூர்யா அவர்கள் ரூபாய் 30 இலட்சங்கள் நன்கொடையாக கலைப்புலி S.தாணு அவர்களிடம் இயக்குனர் இமயம் பாரதிராஜா, திரு.சிவக்குமார், திரு.ராஜபாண்டியன் முன்னிலையில் வழங்கினார். தர்மம் தலை காக்கும்” என்று தெரிவித்துள்ளார்.