சினிமா

டிசம்பரில் வெளியாகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’

sharpana

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வரும் டிசம்பரில் வெளியாகிறது.

'சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். வில்லனாக வினய் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 51 நாட்கள் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் தென்காசியில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் எடுக்கப்படவுள்ளன. ஒரு பாடல் கோவாவிலும் மற்றொரு பாடல் சென்னையிலும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் வினய் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். ’டாக்டர்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து வினய் பேசும்போது, “இந்த வருடம் எனக்கு சிறப்பாக அமைந்துள்ளது. ‘டாக்டர்’ படத்தில் நடித்தது போன்றே ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்திருக்கிறேன். படம் வரும் டிசம்பரில் வெளியாகிறது” என்று அப்டேட் கொடுத்திருக்கிறார்.