சினிமா

இரண்டே நாளில் ரூ.18 கோடி ரூபாய் வசூல் செய்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’?

sharpana

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ வெளியான இரண்டே நாட்களில் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடையும் என திரைத்துறையினர் கூறுகின்றனர். கொரோனா சூழலிலும் குடும்பங்களை தியேட்டருக்கு கொண்டுவந்துள்ளது ‘டாக்டர்’ என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு,தீபா உள்ளிட்ட பலரும் காமெடியான நடிப்பில் கவனம் ஈர்த்துள்ளனர். இந்த நிலையில், ‘டாக்டர்’ வெளியான இரண்டே நாட்களில் தமிழகத்தில் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதும் என்றும் வெளிநாடுகளில் 6 கோடி ரூபாயும், கர்நாடகா, ஆந்திராவில் 1 கோடிக்கு ரூபாய்க்கு மேலும் வட இந்தியாவில் 22 லட்ச ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தமாக சேர்த்து 27 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது.