சினிமா

’மாநாடு’ ப்ளாக் பஸ்டர்: கேக் வெட்டிக் கொண்டாடிய சிம்பு... தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

sharpana

’மாநாடு’ படத்தின் வெற்றியை நடிகர் சிம்புவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

’ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து ‘மாநாடு’ கடந்த 25 ஆம் தேதி வெளியானது. விடுமுறை நாட்களில் வெளியாகாமல் வேலை நாளில் வெளியாகியே படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாய் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக இதுவரை வெளியான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதல் நாளிலேயே ‘மாநாடு’ படம் தமிழகம் முமுக்க ரூ.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நடிகர் சிம்பும் ‘மாநாடு’ டிசைனிலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டும் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளனர்.