நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நாளை சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகிறார் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2-ஆம் தேதியன்று சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் போதை பொருள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அந்த கப்பலில் இருந்த ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் பிணை கொடுத்த நிலையில் நாளை வெளியாகிறார் என தெரிவித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான், மும்பை மன்னட் பகுதியில் உள்ள வீட்டுக்கு திரும்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல்