சினிமா

திருமணத்திற்குப்பிறகு சல்மான் கானின் ‘டைகர் 3’ படப்பிடிப்பில் இணையும் கத்ரீனா கைஃப்

sharpana

திருமணத்திற்குப்பிறகு சல்மான்கானின் ‘டைகர் 3’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார் நடிகை கத்ரீனா கைஃப்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த பாலிவுட்டின் கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் ஜோடி கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிக பிரம்மாண்டமாக நடந்த இவர்களது திருமணத்தில் உறவினர்கள், பாலிவுட் நடிகர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சமீபத்தில் இருவரும் தேனிலவை முடித்துக்கொண்டு மும்பை விமான நிலையம் வந்தடைந்த புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், எந்த இடத்திற்கு தேனிலவுக்குச் சென்றார்கள் என்று வெளியிடவில்லை. இந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பவிருக்கிறார் நடிகை கத்ரீனா கைஃப். சல்மான்கானின் ‘டைகர் 3’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. 15 நாட்கள் நடக்கும் படப்பிடிப்பில் ஹீரோயினாக நடித்துள்ள கத்ரீனா கைஃப்-சல்மான் கான் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இப்படத்தை, மனீஷ் ஷர்மா இயக்கியுள்ளார்.

ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ’டைகர் 3’ படப்பிடிப்பு ரஷ்யா, துருக்கி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டெல்லியில் நடைபெறுகிறது. கத்ரீனா கைஃப் நடிப்பில் கடைசியாக ‘சூர்யன்வன்ஷி’ படமும், விக்கி கெளஷல் நடிப்பில் ‘சர்தார் உத்தம்’ வெளியானது குறிப்பிடத்தக்கது.