சினிமா

எங்க வீட்டுக்கு ரூ.70 ஆயிரத்துக்கு மேல் கரண்ட் பில்..! : நடிகர் பிரசன்னா

webteam

ரூ.70 ஆயிரத்திற்கும் மேலான மின்சார கட்டணத்தை தன்னால் கட்டமுடியும் என்றாலும், சாதாரண மக்களால் எப்படி கட்டமுடியும் என்று நடிகர் பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்சாரக் கட்டணம் தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த நடிகர் பிரசன்னா, “இந்த மாதம் மின்சாரக் கட்டணம் எனது தந்தை, மாமனார் மற்றும் தன்னுடைய வீட்டிற்கு சேர்த்து ரூ.70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி மாதத்தை காட்டிலும் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. பொதுமுடக்கத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், மின்சார வாரியம் தவணை முறையில் கட்டுவதற்கு அல்லது கணக்கீடு எடுக்காத மாதத்திற்கு மாற்று வழியை பின்பற்ற வேண்டும். என்னால் இந்தத் தொகையை கட்டிவிட முடியும். சாதாரண மக்களால் கட்ட இயலாது” என்று தெரிவித்துள்ளார்.

பிரசன்னாவின் கருத்துக்கு விளக்கமளித்துள்ள மின்சார வாரியம், அவரது மின்சார கணக்கு எண் மீண்டும் கணக்கீடு செய்து சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது.