சினிமா

"சிக்னலில் யாசகம் கேட்கும் குழந்தைகளை இயக்குவது யார்?" - இயக்குநர் பார்த்திபன் கேள்வி!

webteam

சிக்னலில் யாசகம் கேட்கும் குழந்தைகளை பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு நடிகர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிக்னலில் யாசகம் கேட்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாகக் கூறினார். எனினும் இந்த நிலையை முற்றிலும் போக்க வேண்டும் என பார்த்திபன் கேட்டுக்கொண்டுள்ளார்.