சினிமா

பழனி கோயிலுக்கு சென்ற தனுஷைக் காண திரண்ட ரசிகர்கள்!

webteam

புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

பழனி அருகே கோம்பைப்பட்டியில் 'சுருளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு சென்றிருந்த தனுஷ், மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகனுடன் பழனி முருகன் கோயிலில் வழிபாடு செய்தார்.

கோவில் நிர்வாகம் சார்பாக‌ அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அரையாண்டு பள்ளி விடுமுறை, ஐயப்ப பக்தர்கள் சீசன் மற்றும் சனிக்கிழமை பொது விடுமுறை என்பதால் பழனி மலைக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

தனுஷின் வருகையை அடுத்து அவரைக்காண அங்கிருந்தவர்கள் ஆர்வம் காட்டியதால் பழனி கோயிலில் பரபரப்பு நிலவியது. பலரும் தனுஷுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், கைகுலுக்கவும் திரண்டதால் மலைக்கோயில் பகுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டது.