சினிமா

இன்று துவங்கிய அருண் விஜய்யின் ‘யானை’ மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு

sharpana

ஹரி - அருண் விஜய்யின் ‘யானை’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, வில்லனாக நடிக்கும் கருடா ராமுக்கும் அருண் விஜய்க்குமான காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிலையில், ‘யானை’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. இதனை அருண் விஜய் உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.