சினிமா

திருவண்ணாமலையில் ரசிகர்களுடன் சேர்ந்து கிரிவலம் சென்ற அருண் விஜய்

sharpana

நடிகர் அருண் விஜய் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘அக்னி சிறகுகள்’, ‘சினம்’, ‘பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில், இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளார். அதேபோல, ‘குற்றம் 23’ இயக்குநர் அறிவழகனுடன் மீண்டும் இணைந்துள்ள ‘பார்டர்’, சூர்யா தயாரிக்கும் ‘ஓ மை டாக்’ படங்களுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

தனது படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால். அருண் விஜய் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். ’இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும்’ என வேண்டிக் கொண்டதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், தனது ரசிகர்களுடன் இணைந்து கிரிவலமும் சுற்றினார். அப்போது, துப்புரவு தொழிலாளர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.