சினிமா

பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரூ.25 கோடி நிதி !

jagadeesh

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளையேற்று பாலிவுட் நடிகர் அக்சய் குமார் கொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அக்சய் குமார் "இதுதான் சரியான தருணம், நம் நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு. நம்மால் முடிந்தை இந்நேரத்தில் செய்ய வேண்டும். என்னுடைய சேமிப்பில் இருந்து ரூ.25 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன். நாம் உயிர்களை காப்பாற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி "பொது மக்கள் வழங்கும் சிறிய அளவிலான நிதி, பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்ற உதவும். வளமான இந்தியாவை உருவாக்க வருங்கால சந்ததியினருக்கு இது உதவும். மக்கள் தாங்கள் விரும்பும் நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம். நீங்கள் அளிக்கும் நிதி எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ளும் பேரிடருக்கு நிச்சயம் உதவும்" என தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் கொரோனாவாத் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.