சினிமா

’எழுந்து வா பச்சன் உன்னால் முடியும்’ உடல்நிலை குறித்த அபிஷேக் பச்சனின் உருக்கமான பதிவு!!

webteam

நடிகர் அபிஷேக் பச்சன் தனது உடல்நிலைக் குறித்த மருத்துவ அறிவிப்பு பலகை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர் தற்போது வீடு திரும்ப வாய்ப்பில்லை என்பது தெரிகிறது. 

கடந்த மாதம் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனாத்தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்த சில நாட்களில் அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யாராயுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில் நடிகர் அமிதாப்பச்சனும் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வீடு திரும்பினார். இதனிடையே நடிகர் அபிஷேக் பச்சன் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர் மருத்துவமனையின் தனது அறையில் உடல்நிலை நிலவரம் குறித்த மருத்துவபலகை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புபலகையில் மருத்துவமனையில் சேர்ந்து 26 வது நாள் ஆகிறது, தற்போதைக்கு வீடு திரும்ப கூடிய சூழ்நிலை என்றும் ஆனால் தனியாக தன்னை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு தனது உடல்நிலை தேறி விட்டது, நான் உண்ணும் உணவுவானது வழக்கமாக தனது உணவு அட்டவணையில் இடம் பெறும் உணவாக மாறியுள்ளது ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலகையை தனது இன்ஸாடாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அபிஷேக் பச்சன் தன்னை ஊக்கப்படுத்தும் விதமாக “ எழுந்து வா பச்சன் உன்னால் முடியும்” என்றும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது சக நண்பர்களும் ரசிகர்களும் அபிஷேக் பச்சனை ஊக்கப்படுத்தி விரைவில் வீடு திரும்ப ஊக்கப்படுத்தி வருகின்றனர்.