சினிமா

“கலாமின் பசுமைக்காவலராய் வலம் வந்தவர் விவேக்” : கமல்ஹாசன் புகழஞ்சலி

Veeramani

அப்துல் கலாமின் இளவலாய், பசுமைக்காவலராய் வலம் வந்தவர் விவேக் என்று நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் “நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு” என தெரிவித்துள்ளார்.