சினிமா

முதல் நாள் ஷூட்டிங்: சல்மானுக்கு நன்றி சொன்ன வில்லன் சுதீப்!

webteam

’தபாங் 3’ படத்தில் சல்மான் கானுக்கு வில்லனாக நடிக்கும் கன்னட ஹீரோ சுதீப், அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். 

சல்மான் கான், சோனாக்‌ஷி சின்கா, டிம்பிள் கபாடியா, அனுபம் கெர் உட்பட பலர் நடித்திருந்த இந்தி படம், ‘தபாங்’. அபினவ் காஷ்யப் இயக்கி இருந்த இந்தப் படத்தை சல்மான் சகோதரர், அர்பாஸ் கான் தயாரித்திருந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்திருந்தது. இதில் சல்புல் பாண்டே என்ற போலீஸ் இஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருந்தார் சல்மான். இது, தமிழில் சிம்பு நடிக்க, ’ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. பெரிய வரவேற்பை பெறவில்லை.

’தபாங்’ படத்தின் இரண்டாம் பாகம் 2012-ல் வெளியானது. முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த சோனாக்‌ஷி சின்காவே இதிலும் நடித்திருந் தார். வில்லனாக, பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். சல்மானின் சகோதாரர் அர்பாஸ் கான் தயாரித்து, இயக்கியிருந்தார். இந்தப் படமும் ஹிட்டா னது. இதன் மூன்றாம் பாகம் இப்போது உருவாகிறது. அர்பாஸ் கான் தயாரிக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார். சல்மான் கான் நடித்த ’வான்டட்’ படத்தை இவர் ஏற்கனவே இயக்கி இருந்தார். சோனாக்‌ஷி ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில் சல்மான் கானுக்கு வில்லனாக நடிக்கும் கன்னட நடிகர் சுதீப், சல்மான்கானுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், ஜிம்மில் இருவரும் நிற்கின்றனர். 

‘’புன்னகையுடன் நிறைவு பெற்றது ’தபாங் 3’ முதல் நாள் ஷூட்டிங். அது பரபரப்பான நாள். அற்புதமான யூனிட். சிறப்பான மனிதர்கள். லொகேஷ னிலேயே ஜிம் இருந்தது போனஸ். வீட்டில் இருந்தது போன்ற உணர்வை தந்ததற்கு நன்றி, சல்மான் சார்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார் சுதீப்.