சினிமா

ஹரி – அருண் விஜய் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

ஹரி – அருண் விஜய் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

sharpana

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ”அருண் விஜய் 33” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் ஹரி. அவரது இயக்கத்தில், சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம், வேங்கை என பட படங்கள் வெளியாகியுள்ளன. விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இயக்குநராக பணியாற்றியுள்ள ஹரி இதுவரை தனது மனைவியின் அண்ணனும் நடிகருமான அருண் விஜய்யுடன் பணியாற்றியது இல்லை.

இருவரும் எப்போது இணைவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துவந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஏற்கனவே, அருவா படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யாவை வைத்து ஹரி இயக்குவதாக இருந்தது. ஹரிக்கும், சூர்யாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் இப்படம் தள்ளிப்போனது. காரணம், சூரரைப் போற்று படத்தை ஓடிடியில் வெளியிட ஹரி எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் ’அருவா’ படத்தை அருண் விஜய்யை வைத்து ஹரி இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. த்ரிஷா இல்லனா நயன்தாரா, இமைக்கா நொடிகள் படங்களைத் தயாரித்த சக்திவேல் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், இன்று இயக்குநர் ஹரி,அருண் விஜய், விஜயகுமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் பூஜையில் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.