வணிகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகம்

கலிலுல்லா

இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தில் வர்த்தகமாகின்றன.

இன்று காலை 10.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 602 புள்ளிகள் உயர்ந்து 56,724 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 171 புள்ளிகள் அதிகரித்து 16,876 புள்ளிகளில் வணிகமாகியது.

இன்றைய வர்த்தகத்தில், டைட்டன், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், எம் அண்டு எம், மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. சர்வதேச பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமாவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.