வணிகம்

வரிச்சலுகை அளிக்க கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

Rasus

கடல் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய பட்ஜெட்டில் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என தூத்துக்குடி கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் சோதனை கூடம் இல்லாமல் இருப்பது, வங்கி கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள்,ஏ ற்றுமதிக்கான வருமான வரி போன்றவை இந்த தொழிலை பாதித்திருப்பதாக ஏற்மதியாளர்கள் கூறுகின்றனர்.

சர்வசேத தரத்தில் வசதிகளை ஏற்படுத்துவதுடன் சலுகைகளை மத்திய அரசு அளித்தால் தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.