வணிகம்

உலகளவில் எரிபொருள் விலை ஏற்றத்தை கவனிக்கிறோம் - பெட்ரோலிய அமைச்சகம்

Sinekadhara

உக்ரைன் - ரஷ்யா போர் சூழலில் உலகளவில் ஏற்படும் எரிபொருள் விலை மாற்றத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக பெட்ரோலிய அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி, உக்ரைன் - ரஷ்யா போரால் சர்வதேச அளவில் எரிபொருள் விலை மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டு வருவதாக கூறியுள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.