வணிகம்

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடல் தயாராகி வருவதாக தகவல்!

EllusamyKarthik

இந்தியாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை சந்தைக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலை தயாரிப்பதற்கான பணிகளை மாருதி முன்னெடுத்து உள்ளதாம். இந்த மாடல் வரும் 2022-இல் வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. 

2022 எர்டிகா மாடல் கார் அண்மையில் டெஸ்ட் ரன் செய்யப்பட்டிருந்த நிலையில் ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்போது விற்பனையாகி வரும் எர்டிகாவிற்கும், இந்த புதிய மாடலுக்கும் வெளிப்புற தோற்றத்தில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என சொல்லப்படுகிறது. இருந்தாலும் அதன் கிரில் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாம். அதே போல இந்த கார் 7 சீட்டர் மாடலாகவே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரவிருக்கும் இந்த புதிய மாடலில் 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சினே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் இதில் இடம் பெற்றிருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மற்றபடி ஹெட்லைட், பம்பர், அலாய் வீல் மற்றும் டெயில் லேம்ப் என அனைத்தும் தற்போது உள்ள மாடலை போன்றே இருக்குமாம்.