வணிகம்

வருடத்தின் கடைசி நாள் - சரிவுடன் முடிந்த இந்திய பங்கு சந்தை

webteam

ஆண்டின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்தன.

2019ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று, பங்கு சந்தை முதலீடுகளில் இருந்து லாபத்தை எடுக்கும் போக்கு அதிகரித்ததால், இந்திய பங்கு சந்தைகள் சரிவுடனேயே வர்த்தகத்தை தொடங்கின. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 304 பள்ளிகள் சரிவடைந்து, 41 ஆயிரத்து 253 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி, ஐ.சி.ஐ.சி.ஐ., டிசிஎஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தின்போது சரிவை சந்தித்தன. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 87 புள்ளிகள் குறைந்து 12 ஆயிரத்து 168 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.