வணிகம்

ஜிஎஸ்டி செஸ் வரியால் கார்களின் விலையை உயர்த்தியது ஹுண்டாய்

webteam

ஜிஎஸ்டி செஸ் வரியால் எஸ்யுவி கார்களின் விலையை ஹுண்டாய் கார் நிறுவனம் கணிசமாக உயர்த்தியுள்ளது.

ஹுண்டாய் நிறுவனம் சொகுசு மற்றும் எஸ்யுவி ரக கார்களின் விலையை 2 முதல் 5 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. 12 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 85 ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த 11ம் தேதி முதல் அமலுக்கு வந்து விட்டதாக ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. சொகுசு கார்களுக்கான ஜிஎஸ்டி செஸ் வரி அதிகரிக்கப்பட்ட நிலையில் ஹோண்டா, டொயோட்டா நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ளன.