வணிகம்

புதிய உச்சத்தில் தங்க விலை : சவரன் ரூ.38,776க்கு விற்பனை

webteam

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38.766க்கு விற்பனையாகிறது.

கொரோனா பாதிப்பால் உலக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் உலக வர்த்தகத்தில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் முதலீட்டாளர்கள் எந்த துறையையும் நம்பாமல், அதிக முதலீடுகளை தங்கத்தில் குவித்து வருகின்றனர். இதன் விளைவாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ரூ.592 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,776 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இதுவரை இல்லாத உச்சமாகும். இதுதவிர வெள்ளி ஒரு கிராம் ரூ.67.40க்கும், ஒரு கிலோ ரூ.67,400க்கு விற்பனையாகிறது.