வணிகம்

வரலாற்றில் முதல் முறையாக 50 ஆயிரத்தை தாண்டிய 10 கிராம் தங்கத்தின் விலை !

வரலாற்றில் முதல் முறையாக 50 ஆயிரத்தை தாண்டிய 10 கிராம் தங்கத்தின் விலை !

jagadeesh

வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் 10 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்தை தாண்டி பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம்சி எக்ஸில் 10 கிராம் தங்கத்துக்கான ஆகஸ்ட் மாதத்தின் விலை  50,085 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இந்தியாவின் ஃப்யூச்சர் சந்தையில் தங்கம் 50,000 ரூபாயைக் கடப்பது இதுவே முதல் முறை. அதே போல எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமகும், ஒரு கிலோ வெள்ளிக்கான செப்டம்பர் மாத விலை இன்று காலையில் அதிகபட்சமாக ரூ. 61,255 ரூபாய் வரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 

மேலும் சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 டாலரைத் தாண்டி இன்று 1,865 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத உச்ச விலை என்பது வர்த்தக வல்லுனர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,736ரூபாயாக இருந்த நிலையில் இன்று 544 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது. மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,152 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது.