வணிகம்

“பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட் வசம் விற்பது மிகப்பெரிய தவறு” - ரகுராம் ராஜன்

EllusamyKarthik

பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட் வசம் விற்பது மிகப்பெரிய தவறு எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். இந்த தனியார் மயமாக்கும் முறை குறித்த விவரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

“எந்தவொரு வங்கியையும் வெளிநாட்டு வங்கிகளுக்கு விற்பதென்பது அரசியல் ரீதியாக இயலாத காரியம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.