கொரோனா 2-ஆவது அலை காரணமாக சென்னை உள்ளிட்ட 8 பெரு நகரங்களில் வீடுகள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரபல வீட்டுவசதி தரகு நிறுவனமான 'புரோப்டைகர்' வீடு விற்பனை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் 3 மாதங்களில் வீடுகள் விற்பனை 76 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்தில் 66 ஆயிரத்து 176 வீடுகள் விற்பனையான நிலையில் இந்தாண்டு அதே 3 மாதத்தில் 15 ஆயிரத்து 968 வீடுகள் மட்டுமே விற்பனையானதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. சென்னையை பொறுத்தவரை வீடு விற்பனை 4 ஆயிரத்து 468 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.