வணிகம்

சென்னை: ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 536 உயர்வு

webteam

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.536 உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.536 உயர்ந்து ரூ.38,520 க்கும், கிராமுக்கு ரூ.67 உயர்ந்து ரூ.4,815க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41,592 க்கும், கிராமுக்கு ரூ.5,199க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 72 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 2100 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.