விவசாயம்

ஹைட்ரோகார்பன் பிரித்தெடுப்பு பணி நடக்கவில்லை - கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

Sinekadhara

தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை என மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.

புதுக்கோட்டை வடத்தெரு, ராமநாதபுரம் என இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருக்கிறார்.