விவசாயம்

திருவாரூர்: ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Sinekadhara

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா தாளடி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதேசமயத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாகவும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தமிழகம் முழுவதிலும் விவசாயிகள் கடும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா தாளடி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் முன்னதாக விவசாயிகள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.