விவசாயம்

திருவாரூர்: உரம் விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு - 12 கடைகளுக்கு ஒரு வாரம் தடை

Veeramani

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உரம் விற்பனை செய்யும் கடைகளில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உரக் கடைகளில் ஆவணங்களில் உள்ள இருப்பும் கடைகளில் உள்ள இருப்பையும் சரிப்பார்ப்பதற்காகவும், கடைகளில் விலைப்பட்டியல் சரியான முறையில் விவசாயிகளுக்குத் தெரியும் வண்ணம் எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறியவும், வேறு ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுகிறதா என்பதை கண்டுபிடிக்கவும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உரக் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் சரியாக பதிவேடுகளை பராமரிக்காத 12 கடைகளுக்கு ஒரு வாரம் உரம் விற்பனை செய்ய தடை விதித்தது திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை.