விவசாயம்

நீலகிரி: விளைச்சல் இருக்கு ஆனால் விலை இல்லை... புலம்பும் பூண்டு விவசாயிகள்

kaleelrahman

நீலகிரி மாவட்டத்தில் பூண்டுவரத்து அதிகரித்து இருப்பதால் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள பூண்டு மண்டிகளில் பூண்டு விலை பாதியாக குறைந்திருக்கிறது.

நீலகிரி மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களில் பூண்டு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால் சேலம் மாவட்டத்தில் உள்ள மண்டிகளுக்கு மாதத்திற்கு 50 வண்டிகளில் வந்த பூண்டு தற்போது 100 லாரிகளாக அதிகரித்து இருக்கிறது.