விவசாயம்

மதுரை: கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 10 டன் நெல் மணிகள் சேதம்

webteam

திருமங்கலம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 10 டன் நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 300 ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 10 டன் நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு வெளியே விவசாயிகள் மலை போல் குவித்து வைத்துள்ளனர்.

திடீரென அப்பகுதியில் மழை பெய்ததால் நெல் மணிகள் நனைந்து வீணாகியுள்ளன. மேலும் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் மணிகளும் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விரைந்து நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓரிரு தினங்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என வேளாண் துறையினர் உறுதி அளித்துள்ளனர்.