விவசாயம்

பாரத் பந்த் வெல்லட்டும்; மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்

பாரத் பந்த் வெல்லட்டும்; மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்

kaleelrahman

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளை பாதிக்கும் என்று தலைநகர் டெல்லியில் கடந்த 13 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு விவசாயிகளை அழைத்து பேசியது இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் நாளை மீண்டும் மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.


இந்நிலையில் போராட்டத்தை தீவிரம் படுத்தும் விதமாக இன்று நாடுமுழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவதோடு பல இடங்களில் கடைகளையும் அடைத்து டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது என்றும். உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள் என்றும். உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை!

# Stand with Farmers என நடைபெறும் # Bharat Bandh வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.