விவசாயம்

கொடைக்கானல்: அழிவின் விளிம்பில் உள்ள தாட்பூட் பழங்களை மீட்டெடுக்க விவசாயிகள் கோரிக்கை

kaleelrahman

கொடைக்கானலில் அழிவின் விளிம்பில் உள்ள தாட்பூட்' பழ சாகுபடியை மீட்டெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் தாட்பூட் பழ சாகுபடி கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் இருந்தன. தற்பொழுது நகர் பகுதிகள் கான்கிரீட் காடுகளாக மாறியுள்ளதால் கொடிகளாக வளரும் இந்தச் செடிகள் அழிந்து வருகிறது.

சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் தாட்பூட் பழங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதால் இதனை மீட்டெடுக்க தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.