விவசாயம்

பயிர்களுக்கு விலைகொடுத்து தண்ணீர்: விவசாயிகள் சிந்தும் கண்ணீர்!

பயிர்களுக்கு விலைகொடுத்து தண்ணீர்: விவசாயிகள் சிந்தும் கண்ணீர்!

webteam

வேதாரண்யத்தில் லாரி தண்ணீரை விலைகொடுத்து வாங்கி பயிர்களுக்கு விவசாயிகள் ஊற்றி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். தாணிக்கோட்டகம், வடமழை மணக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் விவசாயிகள், ல‌ரிகள் மூலம் அதை பாய்ச்சி வருகின்றனர். ஜூன் 12ஆம் தேதி திறக்கவேண்டிய தண்ணீரை 2 மாதங்கள் தாமதமாக திறந்ததால், இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.