விவசாயம்

மழையால் பயிர்கள் பாதிப்பு: தஞ்சை, திருவாரூரில் மத்தியக் குழுவினர் ஆய்வு!

sharpana

பருவம் தவறிய மழையால் பயிர்கள் பாதிப்படைந்ததையொட்டி தஞ்சை, திருவாரூரில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் பருவம் தவறிய மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிற்கள் சாய்ந்தும் தண்ணீரில் மூழ்கியும் வீணாயின. நெற்பயிற்களோடு கடலை, உளுந்து உள்ளிட்டப் பயிகளும் தப்பவில்லை.

இதனை மத்தியக் குழுவினர் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் பயிர்களைப் பார்வையிட்டனர். விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தபோது ஏக்கருக்கு 40 ஆயிரம் கேட்டு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.