விவசாயம்

கடலூர்: தொடரும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பயிர்கள்!

webteam

கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரியில் தலா 28 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த கனமழையால் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.