விவசாயம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Veeramani

தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என்றும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்கேரளா கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 20ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.