விவசாயம்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்

Veeramani

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தாரை நியமித்துள்ளது மத்திய அரசு, இவர் 5 ஆண்டு காலம் பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர் தற்போது காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராகவும் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.