விவசாயம்

திருத்துறைப்பூண்டியில் பெருமழை: நீரில் மூழ்கிய 10,000 ஏக்கர் நெற்பயிர்கள்

JustinDurai
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் பெய்த பெருமழையால் 10,000 ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருத்துறைபூண்டியில் 21 சென்டி மீட்டர் மழையும், முத்துப்பேட்டையில் 13 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகனமழையால் வரம்பியம், மணலி, ஆலத்தம்பாடி, பாண்டி, எழிலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இடைவிடாது பொழிந்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.