சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நிராகரித்தது உண்மைதான் - காரணத்தை பகிர்ந்த மணிரத்னம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நிராகரித்தது உண்மைதான் - காரணத்தை பகிர்ந்த மணிரத்னம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நிராகரித்தது உண்மைதான் - காரணத்தை பகிர்ந்த மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினிகாந்த் ஒரு பாகமாக இருக்க விரும்பினார், ஆனால் அவரை நிராகரித்தது உண்மைதான் என்று கூறியுள்ளார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இயக்குநர் மணிரத்னம்.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அன்றிலிருந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் சியான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக பொன்னியின் செல்வன்-1 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "எப்படியாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதனால் நான் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கலாமா என்று மணி சாரிடம் கேட்டேன். என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் வாய்ப்பை மறுத்தார். அது மகிழ்ச்சியாக இருந்தது, வேறு யாராக இருந்தாலும் அப்படி சொல்லியிருக்கமாட்டார்கள், ஆனால் மணி அதை மறுத்தார், இதுதான் அவரை தனித்துவமாக்குகிறது" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் உரையால் ஒன்றில் பேசிய மணிரத்னத்திடம், ரஜினிகாந்த் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பியது உண்மையா என்று  கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய மணிரத்னம், "அது உண்மை தான். அவர் அதை அன்புடன் குறிப்பிட்டார் அவ்வளவுதான், அவர் ஒரு பெரிய நட்சத்திரம்; படத்தின் தேர்விற்கு நிறைய கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. கதைக்கு நேர்மையாக இருக்க வேண்டும். எனவே என்னால் அவரை கொண்டு வர முடியாது என்று சொன்னேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த படத்தில் ரஜினி மற்றும் உங்கள் காம்பினேஷன் பார்க்கலாமா என்று கேட்டபோது, “யாருக்கு தெரியும், பார்க்கலாம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com