அதன் ஒரு பகுதியாக, விவசாயத்திற்கான இலவச மின்சாரத் திட்டத்திற்காக மின் வாரியத்திற்கு ரூ.4,508 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூரிய சக்தியால் இயங்கும் 5,000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும் என்றும் சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான மானியத் திட்டம் ரூ.114.68 கோடி செலவில் செயல்படுத்தப்படும் எனவும் வேளாண் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.