"தமிழ்நாட்டில் 63,125 பேர் இயற்கை விவசாயம் செய்ய முயற்சி" - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

"தமிழ்நாட்டில் 63,125 பேர் இயற்கை விவசாயம் செய்ய முயற்சி" - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
"தமிழ்நாட்டில் 63,125 பேர் இயற்கை விவசாயம் செய்ய முயற்சி" - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் 63 ஆயிரத்து 125 பேர் இயற்கை விவசாயம் செய்ய முயற்சிகள் எடுத்துள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழர் இயற்கை வேளாண் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த The Rise - எழுமின் என்ற உலகளாவிய அமைப்பு, 70 நாடுகளில் வாழும் தமிழ் தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து லண்டனில் வரும் மே மாதம் மாநாடு நடத்துகிறது. இதற்கான முன்னேற்பாட்டு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், நிகழ்ச்சியின் தலைப்பே தெரியாது என்றும், என்ன நிகழ்ச்சி என்று தெரியவில்லை எனவும் நகைச்சுவையாக பேசத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், உழவர் சந்தையை உலக சந்தையாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், இயற்கை விவசாயத்தில் உற்பத்தியாகும் பொருட்களை சந்தைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com