"வேளாண் சட்ட மசோதாவிற்கு நான் கியாரண்டி" - குஷ்பு பேச்சு
வேளாண் சட்ட மசோதாவிற்கு நான் கியாரண்டி என குஷ்பு தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து விளக்கி பேசினார்.
அப்போது அவர் “ இந்த வேளாண் மசோதா விவசாயிகளை பாதுகாக்கும் மசோதா. வேளாண் மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தூண்டிவிடுகின்றனர்.
இந்த வேளாண் மசோதாவிற்கு நான் கியாரண்டி. நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு பா.ஜ.கவை நம்பலாம். இந்த மசோதா மூலம் அம்பானியும், அதானியும் பயனடைவார்கள் என்பது தவறானது. தமிழ் மொழிக்கு பாரத பிரதமர் முக்கியம் கொடுக்கின்றார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் வந்து மோடி சுத்த தமிழில் உங்களிடம் பேசி பரப்புரை செய்வார்.”என்றார்.
மேலும், “ ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோருக்கு நான் தற்போது கூறிக்கொள்வது என்னவென்றால், வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால், இப்படியே விலகிக் கொள்கிறேன். அதனை நான் தற்போது கடிதத்தில்கூட எழுதித் தருகிறேன்”என்று பேசினார்.