வெண்டைக்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை

வெண்டைக்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை
வெண்டைக்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை

வெண்டைக்காய் விலை குறைப்பால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடியை சுற்றியுள்ள கிராமங்களில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட தற்போது விளைச்சல் அதிகரித்த போதிலும் கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.8 வரை மட்டுமே வியாபாரிகள் தருவதாக கூறுகின்றனர். இதனால்‌ வெண்டைக்காயை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். சென்ற ஆண்டு வெண்டைக்காய் கிலோ ஒன்றுக்கு 20 முதல் 25 ரூபாய் வரை விலை போனதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தேனி மாவட்டம் போடி அருகே சுந்தர்ராஜபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி, ராசிங்காபுரம், நாகலாபுரம், தேவாரம் ஆகிய கிராமங்களில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜீலை முதல் செப்டம்பர் வரை சீசன் ஆகும். நடவு செய்த 45 முதல் 55 நாட்களில் நன்கு விளைந்த நிலையில் வெண்டைக்காய் பறித்தால் நல்ல பலன் கிடைக்கும். கடந்த ஆண்டு வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்த நிலையில் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை நல்ல விலை இருந்தது. தற்பொழுது இப்பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி கடந்த ஆண்டை காட்டிலும் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வெண்டைக்காய் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தற்பொழுது அதிக வரத்தால் விலை குறைந்து விவசாயிகளிடம் வியாபாரிகள் கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை வாங்குகின்றன. மருந்தடிப்பு எடுப்பு கூலி உள்ளிட்ட செலவுகளுக்கு கூட இந்த விலை கட்டுபடி ஆகாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில் பல விவசாயிகள் வெண்டைக்காயை செடிகளிலே பறிக்காமலேயே விட்டு விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com