இந்தியா அவமானத்தில் தலைகுனிகிறது: ஹரியானா விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு ராகுல் கோபம்

இந்தியா அவமானத்தில் தலைகுனிகிறது: ஹரியானா விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு ராகுல் கோபம்

இந்தியா அவமானத்தில் தலைகுனிகிறது: ஹரியானா விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு ராகுல் கோபம்
Published on

ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடுமையாக கண்டித்துள்ளார்.

ஹரியானா போராட்டத்தில் காயமடைந்த ஒரு விவசாயியின் படத்தை பகிர்ந்த ராகுல்காந்தி, "மீண்டும் விவசாயிகளின் இரத்தம் சிந்தியது, இந்தியா வெட்கி தலை குனிகிறது" என்று ட்வீட் செய்தார்.

ஹரியானா மாநிலம் கர்னலில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது ஹரியானா காவல்துறையினர் லத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பல விவசாயிகள் காயமடைந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com